நன்கொடையாளர்கள் :
பன்னிரு திருமுறைச் செப்பேட்டுத் திருக்கோயில் அமைவதற்கு நிலம் வழங்குபவர்களுக்கும், நிலம் வாங்க பங்கு கொள்பவர்களுக்கும், திருமுறைத் திருக்கோயில் அமைப்பதற்கும், மகா மண்டபம், பன்னிரு திருமுறைசெப்பேடு செய்வதற்கும், திருமுறைத் திருக்கோயிலில் அனைத்து சன்னதிகள் அமைவதற்கும், திருமடப்பள்ளி, பூஜை பொருட்கள் வைக்கும் அறை, நூலகம், அன்னதானக்கூடம், முகப்பு வளைவு, சுற்று மதிற்சுவர், மின் இணைப்பு, போர்வெல், நீர்த்தேக்கத்தொட்டி, நந்தவனம் குளியலறை, கழிவறை அமைவதற்கும் இவையனைத்தும் முறையே அமைக்கப்பட வேண்டும். வருங்கால சந்ததியினர்களும், உலகெலாம் உள்ள சைவ சமய பெருமக்களும், அப்பாலும் அடிசார்ந்த அடியார்களும், நம் சைவ சமய நெறிகளை பின்பற்றவும் இத்திருப்பணி அவசியம் ஆகும். ஆகவே இத்திருப்பணியில் நன்கொடையாளர்களை திருமுறைச் செப்பேட்டுத் திருக்கோயில் அறக்கட்டளையில் பரம்பரை அறங்காவலர்களாக முறையாக பதிவு செய்து நன்கொடையார்களுக்கும் திருமுறைத் திருக்கோயில் அறங்காவலர் என்னும் செப்புப் பட்டயம் வழங்கி ஸ்ரீ நடராஜப் பெருமான் திருவருளே முன்னின்று கௌரவிக்கப்படும்.