ஸ்ரீ பொள்ளாப்பிள்ளையார், ஸ்படிக லிங்கம், ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமி, ஸ்ரீ நந்தியெம்பெருமான் அறுபத்துமூன்று நாயன்மார்கள், ஒன்பது தொகையடியார்கள், தெய்வச்சேக்கிழார், இராஜராஜசோழன், அநபாயசோழன், பாவைமார்கள், செப்புத் திருமேனிகளாக செய்யப்பெற்று பொன்னம்பல வடிவில் ரதம் அமைத்து தில்லை ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து ஸ்ரீ நடராஜ பெருமான் திருவருளுடன் ரதயாத்திரை தொடங்கப் பெற்று அறுபத்துமூவர் அவதாரத்தலங்கள் முக்தித் தலங்கள் சென்று அறுபத்து மூன்றாம் நாள் தெய்வச் சேக்கிழார் அவதரித்த குன்றத்தூரில் 08.12.2008 ல் தெய்வச் சேக்கிழார் திருக்கோயில் கும்பாபிஷேகமும், ரதயாத்திரை நிறைவு விழாவும், சிறப்பாக திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் நிறைவு பெற்றது